சென்னை: சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை, நாகைக்கு பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறையை மட்டும் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்..!! appeared first on Dinakaran.