×

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் உள்ளதாக பண மோசடி செய்ய வாய்ப்பு: சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் நடைபெறும் சென்னை – குஜராத் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை என சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன. ஐ.பி.எல். போட்டிகளை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இதனை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் பணம் பறிக்கும் வேலையில் மோசடி கும்பல்கள் ஈடுபட்டுள்ளனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் உள்ளதாக ரூ.3,000 முதல் 10,000 வரை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வேலூரில் மட்டும் கடந்த வாரம் 5 புகார்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் வந்தால் யாரும் அதனை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் உள்ளதாக பண மோசடி செய்ய வாய்ப்பு: சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : IPL tournament ,Chennai ,Chennai-Gujarat ,Chennai, Chennai ,IPL ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...