×

பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணனின் மறைவு பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கருமுத்து கண்ணன் மறைந்த செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது தந்தை காலத்தில் இருந்தே திமுக மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும் அன்பு கொண்டிருந்தவர் கருமுத்து கண்ணன். நான் எப்போதும் மதுரை சென்றாலும் பாசத்தோடும், இன்முகத்தோடும் வரவேற்பார். பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணனின் மறைவு பேரிழப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

The post பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணனின் மறைவு பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Karumuthu Kannan ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Madurai ,Meenakshi Amman Koil Thakkar ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...