×

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வீட்டில் நகை பணம் கொள்ளை

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வல்லூர் தேசிய அனல் மின் நிலைய மின்வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் விவேகானந்தன்(30), ராஜ்குமார்(25). மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள். இவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை அக்கம் பக்கத்தினர் விவேகானந்தன், ராஜ்குமார் வீடுகளில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதாக வீட்டின் உரிமையாளர்களுக்கும் மீஞ்சூர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். மீஞ்சூர் காவல் நிலைய எஸ்ஐ வேலுமணி மற்றும் கைரேகை துறை உதவி ஆய்வாளர்கள் நாகேந்திரன். ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டின் சென்று பதிந்திருந்த கைரேகை பதிவு செய்தனர். விசாரணையில், விவேகானந்தன் வீட்டில் 3 சவரன் நகை ரூ.18,000, ராஜ்குமார் வீட்டில் 2 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வீட்டில் நகை பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Central Industrial Security Force ,Ponneri ,Vivekanandan ,Rajkumar ,Vallur National Thermal Power Station ,Meenjur ,Central Industry ,Central Industry Security Force ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்