×

ஆவடி அருகே செவியிலர் வீட்டில் திருடிய பணத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்: கொள்ளையன் கைது

ஆவடி: செவிலியர் வீட்டில் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு கண்ணன் தியேட்டர் அருகே 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிப்பவர் முருகத்தாய்(48). இவர், அயனாவரம் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை செவிலியர். இவரது கணவர் செந்தில்குமார், சென்னை துறைமுகத்தில் பணியாற்றிவந்தார். இவர், கடந்த வருடம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 10ம் தேதி இவரது கணவர் செந்தில்குமார், முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரைக்கு சென்று குடும்பத்துடன் திதி கொடுத்துவிட்டு சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் 70 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளைபோனது.

இதுகுறித்து ஆவடி காவல் துணை ஆணையர் புருஷோத்தமன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடினர். திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர். அங்கு ஒருவாலிபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பாலா(24) கடந்த 10ம் தேதி முருகத்தாயின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். கள்ளக்காதலியிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். அங்கு 5 நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு, நகைகளை விற்பதற்காக சவுகார்பேட்டைக்கு வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது. போலீசார் பாலாவிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகள் ரூ.50,000 பறிமுதல் செய்தனர். போலீசார் பாலாவை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆவடி அருகே செவியிலர் வீட்டில் திருடிய பணத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்: கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Robber ,Aavadi ,Avadi ,Tirumullaivayal Cholampedu Kannan Theater ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை...