×

கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணை

மதுராந்தகம்: ஸ்ரீ சந்தோஷி தொழில் நுட்ப கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மதுராந்தகம் அடுத்த பையம்பாடி கிராமத்தில் ஸ்ரீ சந்தோஷி தொழில் நுட்பக்கல்லூரி உள்ளது. இங்கு, இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் மாணவர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுக்க வளாக தேர்வு நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் செல்வம் தலைமை தாங்கினார். மேலாளர் குருநாதன் முன்னிலை வகித்தார். நேர் முகத்தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தனியார் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் வேலை வாய்ப்பிற்கான பனியாணைகளை வழங்கினார்.

The post கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Sri Santhoshi Technical College ,Campus InterView ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!!