×

செங்கல்பட்டில் நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து பழுதாகி சாலை நடுவே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் 500. வழக்கம்போல், நேற்று மாலை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் போது, பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரத்தில் திடீரென பழுதாகி சாலை நடுவே நின்றது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கும், பழைய பேருந்து நிலையத்திற்கும் நடுவே அரசு பேருந்து திடீரென பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், உடனே போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்து வந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் பேருந்தினை பணிமனைக்கு கொண்டு சென்றனர். செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மூன்றும் அருகருகே உள்ளது. திடீரென அரசு பேருந்து பழுதானதால் சாலையில் அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்தது. இதன் தொடர்ச்சியாக பழுதான பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகளை இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

The post செங்கல்பட்டில் நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து appeared first on Dinakaran.

Tags : Chengalpadu Nadurod ,Chengalpattu ,Chennai City Transport Corporation ,Thambaram ,Nadurot ,Chengalpat ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...