×

ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை : மதுராந்தகத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயணிகள்..!!

செங்கல்பட்டு: ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தி மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒரு நாள் உன்னவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி மற்றும் பணி நிமித்தமாக ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஒரு சில ரயில்கள் மட்டும் நின்று செல்வதால் நெருக்கடியும் பொருட்படுத்தாது பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். பயணிகள் நலன் கருதி மதுராந்தகத்தில் நின்று செல்லும் ரயில்களின் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரயில் பயணிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

The post ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை : மதுராந்தகத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயணிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Chengalpattu ,Madurandagam ,
× RELATED மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!!