சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் இதுவரை 10 மாணவிகள் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மாணவிகள் போராட்டத்தை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டுள்ளது. 162 மாணவிகளிடம் விசாரணை நடத்தும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. மகளிர் ஆணைய பரிந்துரையின்படி 162 மாணவிகளுக்கும் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று கடந்த 2 வாரங்களில் 10 மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
The post கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் இதுவரை 10 மாணவிகள் போலீசில் ஆஜராகி விளக்கம் appeared first on Dinakaran.