×

சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும்: போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம்

பிரான்ஸ்: ஒரு மாதத்திற்கு மேலாக உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். வாடிகன் நகரில் மக்கள் மத்தியில் தோன்றி பேசிய போப்பாண்டவர் பிரான்சிஸ் சூடானில் மோதிக்கொள்ளும் குழுக்கள் ஆயுதங்களை கைவிட்டு பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சூடான் மக்கள் படும் துயரத்திற்கு சர்வதேச சமூகம் முடிவு கட்ட வேண்டும் என்றும் போப்பாண்டவர் விருப்பம் தெரிவித்தார். உக்ரைன் மீதான போருக்கும் முடிவு ஏற்பட வேண்டும் என்று போப்பாண்டவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இருநாட்டு போரில் அமைதி திரும்ப ரோமன் கத்தோலிக்க மத குருக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

The post சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும்: போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Papandar Francis ,France ,Sudan ,Pope Francis ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...