×

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்..!

தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், சந்திர மோகன் மனைவி வைஷ்ணவி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை ஆகும்.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்..! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,KP Anpahagan ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...