×

பொதுமக்களுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

 

வேப்பூர், மே 22: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீரபாண்டியன் தெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் மகேஷ்குமார் (22) என்பவர் குடிபோதையில் பொதுஇடத்தில் நின்றுகொண்டு, பொதுமக்களை ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.

The post பொதுமக்களுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vepur ,Vrudshawasalam ,Sub-Inspector ,Mayakrishnan ,Virthasalam ,
× RELATED ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது