×

வாலிபர் மண்டை உடைப்பு 2 பேருக்கு வலை

போடி, மே 22: போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் அழகுமலை (29). இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக உள்ள சாலையில் வேகமாக கார் ஒன்று வந்தது. அந்த காரை அழகுமலை வழிமறித்து ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார். அப்போது இவர்களுக்கும், காரின் வந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மகன் சத்தம் கேட்டு அங்கு வந்த அழகுமலையின் தந்தை கருப்பையா, தாயார் இந்திரா ஆகியோரும் காரில் வந்தவர்களிடம் தகராறு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உருட்டு கட்டையை எடுத்து அழகுமலையை சரமாரி தாக்கினர். இதில் அவருக்கு மண்டையை உடைந்தது. மேலும் அவர்கள் கருப்பையா, இந்திராணியையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அழகுமலை தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

The post வாலிபர் மண்டை உடைப்பு 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Karupiya ,Akumalai ,Silamalai ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்