×

தாட்கோ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, மே 22: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தாட்கோ மூலம், ஆதிதிராவிடர்களுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி திட்டம், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதியுதவி,

தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடம், சாதி, வருமான சான்றிதழ்கள், பட்டா சிட்டா(நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு திட்டம்), ரேசன்கார்டு எண், ஆதார் எண், செல் எண், இமெயில் ஐடி, திட்டங்களின் விபரங்கள் முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். தாட்கோ திட்டங்களில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாட்கோ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : TADCO ,Sivagangai ,Adi Dravidians ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்