×

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

 

மதுரை, மே 22: மதுரையில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் பரிதாபமாக பலியானார். மதுரை பழங்காநத்தம் ரயில்வே பாலத்திற்கு கீழ் உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் சிதறி இறந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ரயில்வே போலீஸ் எஸ்ஐ ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் விபத்து குறித்து வழக்குப்பதிந்த போலீசார், இறந்த நபர் குறித்தும் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்றம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Palangantham Railway ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...