×

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 31 பேர் டிஸ்சார்ஜ்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் கடந்த 13ம் தேதி சனிக்கிழமை இரவு விஷ சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 14 பேர் இறந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உடல் நலம் தேறி கடந்த 19ம் தேதி 7 பேரும், 20ம் தேதி 15 பேரும், நேற்று 9 பேரும் என இதுவரை 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.மீதமுள்ள 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அனைவரும் வீடு திரும்புவார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 31 பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Vikravanandi ,Viluppuram district ,Marakkanam ,Ekirikuppam ,
× RELATED தந்தை இறந்த சோகத்தில் தன்னம்பிக்கையை விடவில்லை