×

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், பாரதியார்நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சிவா (30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உறவினர் மகளான ராஜேஸ்வரி (26) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள கழிவறையில் ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குன்றத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் ஆனது முதல் கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. ராஜேஸ்வரிக்கு பேரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதற்கு சிவா எதிர்ப்பு தெரிவித்து திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஷ்வரி, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kundarthur ,Siva ,Ambedgarh street ,Nandambakkam, Bharathyarnagar, Kundarathur ,
× RELATED அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச...