×

தாம்பரம் அருகே பயங்கரம்; கத்தியால் சரமாரி வெட்டி ஆட்டோ டிரைவர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே கத்தியால் சரமாரி வெட்டி ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்துவிட்டு தப்பிய 8 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பல்லு (எ) பாலாஜி (30). ஆட்டோ ஓட்டுனரான இவர், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 8க்கும் மேற்பட்டோர் கொண்ட மர்ம கும்பல், திடீரென பாலாஜியை சுற்றி வளைத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடித்த பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குண்டுமேடு பகுதியை சேர்ந்த கஞ்சா விற்பனை செய்யும் வாலிபர்களுக்கும், பாலாஜிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பாலாஜி மீது கஞ்சா வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாம்பரம் அருகே பயங்கரம்; கத்தியால் சரமாரி வெட்டி ஆட்டோ டிரைவர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thambaram ,TAMBARI ,tambaram ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...