×

தூத்துக்குடி அருகே காரில் கடத்திய 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, மே 21:தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப் இன்ஸ்ெபக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்ெபக்டர் செந்தட்டி ஐயன், ஏட்டுக்கள் பூலையா, நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி அருகே குமாரபுரம் – சிவந்திபட்டி சந்திப்பு பகுதியில் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கியபோது அதில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். காரை சோதனை செய்ததில் அதில், சுமார் 40 கிலோ எடை கொண்ட 13 சாக்கு மூடைகளில் சுமார் 520 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடி அருகே காரில் கடத்திய 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Thoothukudi Civic Supply Crime Investigation Department ,Sub Inspector ,Bharatlingam ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...