×

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள சின்னகணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(45), கூலி தொழிலாளி. இவரது இரட்டை மகள்களான ராமாதேவி, லட்சுமிதேவி ஆகியோர், செக்கரப்பட்டி அருகே தொ.கணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகளை பார்த்த போது, இருவரும் 347 மதிப்பெண் பெற்றிருந்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவிகள் கூறியதாவது:
ஒன்றாக பிறந்த எங்களுக்கு தேவையான அனைத்தையும், ஒரே மாதிரியாக செய்ய வேண்டும் என எங்களது பெற்றோர் எதிர்பார்த்து செய்வார்கள். பள்ளிக்கூடத்திலும் வகுப்பறையில் ஒரே இடத்தில் அமர்ந்து படித்தோம். தேர்வு நாட்களில் பாடங்களை இருவரும் பரிமாறிக் கொண்டு படித்தோம். இதனால் தானோ என்னவோ பத்தாம் வகுப்பில் 347 என ஒரே மதிப்பெண்ணை எடுத்துள்ளோம். இது எங்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் இருவரும் டாக்டருக்கு படித்து பெற்றோருக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்க்க விரும்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் appeared first on Dinakaran.

Tags : NALLAMPALLI ,Krishnan ,Chinnanganavai ,Darmapuri District, Toppur ,Ramadevi ,Dinakaran ,
× RELATED ?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?