×

₹2000 நோட்டுகள் மதிப்பிழப்பு, கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்: முதல்வர் விமர்சனம்

சென்னை: ‘‘கர்நாடக படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரம் தான் ₹2000 நோட்டுகள் மதிப்பிழப்பு’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் இனி ₹2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தினமும் ₹20 ஆயிரம் வரை மாற்றி கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், ‘கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்’ என டிவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள். கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ₹2000 நோட்டுகள் மதிப்பிழப்பு, கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்: முதல்வர் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chennai ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...