சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும். ஏழை, எளியை, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டுவந்து, அதனை மாற்றிக்கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள செப்டம்பர் 30 என்பதை, டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
The post பதற்றமின்றி ₹2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள், வணிகர்களுக்கு டிசம்பர் வரை அவகாசம் வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.