×

போதைப்பொருள் கடத்தல் இந்திய வம்சாவளி இளைஞருக்கு தண்டனை

லண்டன்: நெதர்லாந்தில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டிற்கு கோகைன் மற்றும் கஞ்சாவை கடத்த முயன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் உட்பட கும்பலை போலீசார் கைது செய்தனர். தேசிய கிரைம் ஏஜென்சியின் விசாரணையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஸ்பால் சிங் கோதிரியா போதைப்பொருள் கடத்தும் வாகனத்தின் ஓட்டுனராக இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ஜோஸ்பால் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என வால்வர்ஹாம்டன் கிரவுன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post போதைப்பொருள் கடத்தல் இந்திய வம்சாவளி இளைஞருக்கு தண்டனை appeared first on Dinakaran.

Tags : London ,Netherlands ,UK ,Ireland ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது