×

பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

 


புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அழாய்வு பணியை தொடங்கி வைத்தனர். பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் பணிகள் தொடக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையின் மிக முக்கிய அடையாளமாக இருக்கிற பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என நாம் மேற்கொண்ட தொடர் முயற்சி தற்போது முழுமையடைந்து இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் நமது தொடர் கள ஆய்வுப் பணிக்கும்,ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் நாம் நீதிமன்றத்தை அணுகி அகழ்வாய்வு நடத்த வேண்டும் என நீதிப் போராட்டம் நடத்தியதற்கும்,முழுமையான வெற்றி கிடைத்திருப்பது பெருமிதமளிக்கிறது.

மதுரை உயர்நீதி மன்றத்தில் சட்டப்போராட்டத்திற்கு உதவிய உதவிய புதுக்கோட்டை வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம் அவர்கள், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் தலைவர் கரு ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அகழ்வாய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவு பெற்றோம். அது மட்டுமின்றி,கடந்த ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை நாம் மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு அதனை ஏற்பளித்து அகழ் ஆய்வு நடத்திட அனுமதி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தொல்லியல் கழக மாநாட்டு குழுவின் கௌரவ தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், மேற்கொண்ட முயற்சிக்கு பலனாக யொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை தமிழ்நாடு அரசே மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இந்நிலையில் 2,500 ஆண்டுகளுக்கு மேல பழமையான சங்க காலக்கோட்டை இருப்பது கண்டறியப்பட்டு பல்வேறு காலக்கட்டங்களில் பல தொல்பொருள் ஆய்வாளர்களின் தேடலில் தமிழி எழுத்து கல்வெட்டு, இரும்பு உருக்கு கழிவுகள், அச்சு வார்ப்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. 8 மீட்டர் நீளம், அகலத்தில் ஒரு குழியும் 2 மீட்டர் நீளம், அகலத்தில் ஒரு குழியும் என இரண்டு குழிகள் அமைத்து அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடக்கிறது. இந்த பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அழாய்வு பணியை தொடங்கி வைத்தனர்.

The post பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Poothanakkota ,Pudukkotta ,Ponpanickotta ,Gold South Africa ,Ragupathi ,Maianathan ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...