×

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டோக்கியோ : ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள நிலையில் காந்தி சிலையை அவர் திறந்து வைத்தார். இதனிடையே பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடாவை ஹிரோஷிமாவில் சந்தித்தார். பல்வேறு துறைகளிலும் இந்தியா – ஜப்பான் உறவுகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து உரையாடியதாகவும் வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சார பரிவர்த்தனைகள் குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Mahatma Gandhi ,Hiroshima ,Tokyo ,Modi ,Hiroshima, Japan ,G7 Summit ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…