×

பத்தாம் வகுப்பு தேர்வில் டைம் பள்ளி மாணவி 495 மதிப்பெண் எடுத்து சாதனை

நெல்லை, மே 19: பத்தாம் வகுப்பு தேர்வில் ஆரைக்குளம் டைம் பள்ளி மாணவி, 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். நெல்லை அருகே உள்ள ஆரைக்குளத்தில் டைம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவி அல்ஹாபிழா நுஹா, நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் கணிதம், சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி நிஸ்மா 491 மதிப்பெண்களும், அய்மன் 485 மதிப்பெண்களும் எடுத்து பள்ளி அளவில் முறையே 2 மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். கணிதத்தில் 6 மாணவர்களும், அறிவியலில் ஒருவரும், சமூக அறிவியல் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாகி காஜா ெஷரீப், துணை முதல்வர் வேல்முருகன், ஒருங்கிணைப்பாளர்கள் நாஸிப் அலி, ஜெஸிமா, முன்தஹா, அமீர்சுல்தான், ஜகரிய்யா அல்தாபி ஆகியோர் பாராட்டி கேடயம் வழங்கி கவுரவித்தனர்.

The post பத்தாம் வகுப்பு தேர்வில் டைம் பள்ளி மாணவி 495 மதிப்பெண் எடுத்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Araikulam Time School ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...