×

குண்டாசில் வாலிபர் கைது

நெல்லை, மே 20: பாளை. அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த அல்லல்காத்தான் மகன் அருணாசலம் (24). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை போலீஸ் எஸ்பி சிலம்பரசன், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் கலெக்டர் கார்த்திக்கேயனுக்கு பரிந்துரைத்தனர். அவரது உத்தரவின் பேரில் அருணாசலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார், பாளை. மத்திய சிறையில் வழங்கினர்.

The post குண்டாசில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Nellie ,Palai ,Arunachalam ,Allalkathan ,Keejamunneerpallam Theppakulam street ,Dinakaran ,
× RELATED குண்டாசில் இருவர் கைது