×

பாதுகாக்கும் வழிமுறைகள் மருத்துவர்கள் விளக்கம் மொபட் மீது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி

க.பரமத்தி, மே 20: க.பரமத்தி அடுத்த பருத்திகாட்டுப்பாளையம் பகுதியில் மொபட் மீது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். க.பரமத்தி அடுத்த பருத்திகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் மகன் ஆறுமுகம்(65), இவர் ஊரில் இருந்து குடிநீர் கொண்டு வர மொபட்டில் சென்ற போது எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முதியவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாதுகாக்கும் வழிமுறைகள் மருத்துவர்கள் விளக்கம் மொபட் மீது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : K. Paramathi ,Barthikkatupalayam ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்