×

சூதாட்டம்: 6 பேர் கைது

 

ஈரோடு,மே20: ஈரோடு அழகரசன் நகர் வீட்டுவசதி வாரியம் 3வது தளத்தில் சூதாட்டம் நடப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் ரெய்டு நடத்தினர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அழகரசன் நகர் மணிகண்டன்(31),கார்த்திக்(28), பிரகாஷ்(33), மணிகண்டன்(35),பிரகாஷ்(35), ராஜர்(32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சூதாட்டம்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Karungalpalayam police ,Erode Alagarasan Nagar Housing Board ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!