×

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

தேனி, மே 20: தேனி அல்லிநகரம் தொத்தமன் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் சரண்யா(33). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி மதியம் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே அடுப்பில் தண்ணீரை சரண்யா சுட வைத்துள்ளார். பின்னர், சுடுதண்ணீரை அடுப்பில் இருந்து இறக்கும்போது, சரண்யாவின் சேலையில் தீ பிடித்தது.

இதில் தீ உடலில் பரவியதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். இவரை தேனி அரசினர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சரண்யாவின் தாயார் சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலையில் தீப்பிடித்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Theni ,Ponraj ,Thothaman Street, Allinagaram, ,Saranya ,Saree ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்