×

வாகனம் மோதி விவசாயி பலி

 

அய்யலூர், மே 20: எரியோடு அருகே நாகையன்கோட்டை பண்ணப்பட்டியை சேர்ந்தவர் மலையாளம் (52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் நாகையன்கோட்டையில் இருந்து பண்ணைபட்டி செல்லும் சாலையில் வாசுசா நகர் என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மலையாளம் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலையாளம் உயிரிழந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Malayalam ,Nagayankottai Pannapatti ,Eriodu ,Dinakaran ,
× RELATED அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அனைத்து...