×

காதலியை திருமணம் செய்ய மறுப்பு அண்ணா பல்கலை பேராசிரியர் கைது

திருவெறும்பூர்: காதலியை திருமணம் செய்ய மறுத்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரை திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி அடுத்த திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பாப்பாக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ் (38). அண்ணா பல்கலைக்கழகத்தில் ராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக உள்ள இவர், ஆன்லைன் மூலம் பெண் தேடினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 32 வயதான எம்.இ.பட்டதாரியான பெண் அறிமுகம் கிடைத்தது. அவர் ஒன்றிய அரசு பணியில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கடந்த 6 மாதமாக 2 பேரும் காதலித்து வந்ததோடு செல்போனிலும், நேரிலும் அடிக்கடி பேசி லாட்ஜில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காதலி, மத்திய அரசு வேலை பார்க்கவில்லை என்றும், அவர் தன்னை ஏமாற்றியதும் ரமேசுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த இருந்த ரமேஷ், காதலியுடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். திருமணம் செய்துகொள்ளும்படி காதலி வற்புறுத்திய ேபாது அதற்கு மறுத்த ரமேஷ், திருமணம் செய்ய வேண்டும் என்றால் 100 பவுன் நகை, கார் வேண்டும். இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறி உள்ளார்.

இதுதொடர்பாக ரமேஷ் சமரசம் பேசுவதற்காக, கடந்த 13ம்தேதி தனது வீட்டிற்கு வரும்படி காதலியை அழைத்து தாக்கியதோடு திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார். இதுதொடர்பாக காதலி திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்பி சுஜித்குமார் உத்தரவின்பேரல், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ரமேஷை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.

The post காதலியை திருமணம் செய்ய மறுப்பு அண்ணா பல்கலை பேராசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Anna University ,Thiruvedumpur ,Trichy ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...