சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை, டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் பொது செயலாளர் டி.மகிமை தாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையான அகவிலைப்படி உயர்வினை 1.4.2023 முதல் செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டமைக்காக தொழில்நுட்பக் கல்வித்துறை, டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இதன்படி, தற்போது 38 விழுக்காடாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு எஸ்.சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.