×

மோச்சா புயலுக்கு பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வு

பாங்காக்: மோச்சா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 145ஆக அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான மோச்சா புயல் கடந்த மே 15ம் தேதி வங்காளதேசம் மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

அப்போது பல இடங்களில் பெரும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மோச்சா புயல் மற்றும் வௌ்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. வீடுகள், கடைகள், பாலங்கள் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன.

The post மோச்சா புயலுக்கு பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Bangkok ,Cyclone Mocha ,Bay of Bengal ,Mocha ,Dinakaran ,
× RELATED திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால்...