×

நீட்ஸ் திட்டத்தில் முதலீட்டு மானியம் பெற்ற தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (18.5.2023) திருமழிசை, காக்களூர், அம்பத்தூர் தெழிற்பேட்டைகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு தொழில் வணிகத் துறையின் துறையால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்பு திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் முதலீட்டு மானியங்கள் பெற்ற தொழிற்சாலைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 4 சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், ரூ.656 கோடியே 27 லட்சம் மானியத்துடன், ரூ.1,817 கோடி வங்கிக் கடன் உதவி வழங்கி 22,425 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS) கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 கோடி இலக்கிணையும் தாண்டி ரூ.163 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீட்ஸ் திட்டத்தில் ரூ.21 லட்சம் மானியம் பெற்று தொழில் தொடங்கிய பெண் தொழில் முனைவோரின் ப்ளூ மவுண்ட் டையக்னோஸ்டிக்ஸ் தொழிற்சாலையையும், ரூ.46 இலட்சம் மானியத்துடன் பெண் தொழில் முனைவோரால் தொடங்கப்பட்ட மகா எஞ்னியர்ஸ் தொழிற்சாலையையும், ரூ.50 லட்சம் மானியத்தில் துவங்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கே-லைட் உயர் தர மற்றும் கட்டிடக்கலை விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையையும், ரூ.30 லட்சம் மானியத்தில் துவக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் எச்.பி வால்வ்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட், தொழிற்சாலையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிரமம் இன்றி பணியாற்றும் வகையில் வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளைஅமைச்சர் வழங்கினார். இந்த ஆய்வின் போது, உடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண்ராய், தொழில் வணிக ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜேசப் சாமுவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

The post நீட்ஸ் திட்டத்தில் முதலீட்டு மானியம் பெற்ற தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Moe Andarasan ,Chennai ,Department of Small, Small and ,Medium Enterprises ,Diriksha ,Kakalur ,Ambathur ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி