×

கொக்கு இறைச்சி சாப்பிட்ட நர்சிங் மாணவி சாவு போலீஸ் விசாரணை வந்தவாசி அருகே

வந்தவாசி, மே 19: வந்தவாசி அருகே கொக்கு இறைச்சி சாப்பிட்ட நர்சிங் மாணவி விக்கல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் அஸ்வினி(18), நர்சிங் படித்து வந்தார். கடந்த 14ம் தேதி தனது விவசாய நிலத்துக்கு சென்ற ராஜவேலு, அங்கிருந்து கொக்கு இறைச்சியை எடுத்து வந்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட அஸ்வினிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாகியும் அஸ்வினிக்கு விக்கல் நிற்காததால் அவரது உறவினர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post கொக்கு இறைச்சி சாப்பிட்ட நர்சிங் மாணவி சாவு போலீஸ் விசாரணை வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Tags : Vasi ,Vandavasi ,Thiruvannamalai ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு