தூத்துக்குடி, மே 19: தூத்துக்குடி அருகே தங்கம்மாள்புரத்தில் நடந்த திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி அடுத்த தங்கம்மாள்புரத்தில் நடந்தது. இளைஞர் அணி மத்திய ஒன்றிய அமைப்பாளர் சண்முகநாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட நிர்வாகிகள் தொண்டரணி வீரபாகு, மாணவரணி அருண்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் அம்பாசங்கர், ராஜ், கிரேஸசன், தனேஷ், வர்க்கிஸ்குமார், மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெயக்கொடி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு மாநில துணைச்செயலாளர் கரூர் முரளி, சண்முகையா எம்.எல்.ஏ., வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, யூனியன் சேர்மன் வசுமதிஅம்பாசங்கர், முன்னாள் சேர்மன் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தங்கம்மாள்புரத்தில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.