×

நான் முதல்வன் திட்டத்தில் குளித்தலை கிளை நூலகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

குளித்தலை, மே 19: கரூர் மாவட்டம் குளித்தலை கிளை நூலகர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான ஒன்றிய அரசு சார்பில் நடைபெறும் அரசு தேர்வான ரயில்வே, வங்கி, எஸ்.எஸ்.சி ஆகிய போட்டி தேர்வுக்கும், அதேபோல் தமிழ்நாடு அரசு பணிக்கான டி.என்.பி.சி போட்டி தேர்வுக்கான மூன்று மாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட நூலகர் பரிந்துரையின்படி வருகிற 25ம்தேதி முதல் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இதில் பயிற்சி வகுப்புகள் 300 மணி நேரம், வழிகாட்டுதல் பயிற்சி 300 மணி நேரம், பயிற்சி தேர்வுகள் 120 மணி நேரம் வழங்கப்பட உள்ளது. அது மட்டுமல்ல. அது பயிற்சி வகுப்பில் பயிற்சி புத்தகங்கள் பல நூல்கள் கையேடுகள் வழங்கப்படுகிறது.

அதனால் குளித்தலை பகுதியில் உள்ள அரசு தேர்வுக்கு தகுதியுள்ள மாணவ, மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குளித்தலை கிளை நூலகத்தில் செயல்படும் இலவச பயிற்சி வகுப்பிற்கு நாளை 20ம் தேதிக்குள் ஆன்லைனில் < https://www.naanmudhalvan.tn.gov.in/ >. என்ற குளித்தலை கிளை நூலகத்திற்கு இணையதளத்தின் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கவும். ஏனென்றால் மாவட்ட நிர்வாகம் குளித்தலை கிளை நூலகத்திற்கு 50 மாணவ மாணவிகளை தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரசு தேர்வு எழுத தகுதி உள்ள மாணவ மாணவிகள் மேலே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் குறியீட்டை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

The post நான் முதல்வன் திட்டத்தில் குளித்தலை கிளை நூலகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Kuluthalai ,Branch Library ,Kulithalai ,Karur district ,Selvaraj ,Tamil Nadu government ,
× RELATED குளித்தலை ரயில், பஸ் நிலைய பகுதிகளில்...