×

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

தஞ்சாவூர், மே 19: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனயைில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் அறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் நோயாளி உறவினர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நோயாளிகளாக வந்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நான்காவது வார்டு நோயாளிகள் பிரிவில் உறவினர்கள் காத்திருக்கும் அறை உள்ளது. அப்பகுதியில் மேற்கூறையின் சிமென்ட் பெயர்ந்து விழுந்தது. இதில் இருவர் காயமடைந்தனர்.

அவர்கள் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனே இதனை சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என காத்திருக்கும் பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது நான்காவது வார்டு நோயாளிகளின் பிரிவு நுழைவாயிலில் கயிறுகள் கட்டப்பட்டு தற்போது அப்பகுதியில் யாரும் செல்லாத வண்ணம் இருந்து வருகிறது. மேலும், இருப்பினும் உடனடியாக அதனை சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கவனித்து கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.

The post தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Thanjavur Government Hospital ,Thanjavur ,Thanjavur Medical College hospital ,Dinakaran ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...