×

கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 

கோத்தகிரி,மே19: கோடை விடுமுறையொட்டி கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
மேலும் தமிழக -கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

நேற்று இங்கு வந்த சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக -கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள்,ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா,கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர். மேலும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

The post கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Koda Nadu ,Kodagiri ,Kodanadu ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...