×

துப்பாக்கியுடன் வந்த இருவர் போலீசை கண்டதும் ஓட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே துப்பாக்கியுடன் காரில் வந்த இருவர், போலீசாரை கண்டவுடன் தப்பியோடினர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி எஸ்ஐ மணிமொழி, சிறப்பு எஸ்ஐ வனிதா மற்றும் போலீசார், நேற்று அதிகாலை 2 மணியளவில் குராயூர் – மொச்சிக்குளம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது எதிரே ஒரு கார் மெதுவாக வந்தது. காரின் உள்ளே இருந்த நபர்கள் டார்ச்லைட் அடித்தபடியே வந்தனர். போலீசார் சந்தேகமடைந்து நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார், காரை துரத்தி சென்றனர். போலீசார் பின் தொடர்வதை கண்ட மர்ம நபர்கள், காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். போலீசாரும் விடாமல் காரை விரட்டி சென்றனர். வேகமாக சென்ற கார் அரசபட்டி – கீழக்கோட்டை சாலையில் நின்றது. உடனே காரிலிருந்த 2 பேர் கீழே இறங்கி தப்பியோடி விட்டனர். போலீசார் காரை சோதனையிட்டபோது, அதில் துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் இருந்தன. மேலும் பெரம்பலூர் மாவட்டம் ரைபிள் கிளப் ஐடி அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு இருந்தன. அதில் இருந்த முகவரியில் திருமங்கலம் காளிமுத்து நகரை சோ்ந்த பாலகணேஷ் என்ற பெயர் இருந்தது. இதனை தொடர்ந்து கார், துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

The post துப்பாக்கியுடன் வந்த இருவர் போலீசை கண்டதும் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Madurai district ,Kallikkudi SI Manimozhi ,Dinakaran ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி