×

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர் பலி: 4 பேர் வெற்றிகரமாக ஏறி சாதனை

காத்மண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஒரு இந்தியர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். மற்ற 4 பேரும் வெற்றிகரமாக சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர். நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இந்திய மலையேற்ற வீரர்கள் ஈடுபட்டனர். அவர்களில் யாஷி ஜெயின், மிதில் ராஜு, சுனில் குமார், பங்கி ஹரிஸ் ஆகிய 4 பேரும் 8,848.86 மீட்டர் உயரத்தை எட்டி சாதனை படைத்தனர்.

மகாலு மலையில் ஏறிய இந்திய மலையேற்ற வீராங்கனை பியாலி பசக் கீழே இறங்க முடியாமல் தவித்தார். அவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் 6,800 மீட்டர் உயரத்தை அடைந்தபோது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

The post எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர் பலி: 4 பேர் வெற்றிகரமாக ஏறி சாதனை appeared first on Dinakaran.

Tags : Mount Everest ,Kathmandu ,Everest ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...