இந்த ஐபிஎல் சீசனில் பிளேஆப் சுற்றுக்கு இன்னும் 3 காலியிடங்கள் உள்ளன. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே தற்போது பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. சென்னை, லக்னோ அணிகள் 2ம் மற்றும் 3ம் இடத்தில் இருந்தாலும் கடைசி லீக் போட்டி முடிவுகள் மற்றும் நிகர ரன் ரேட் அடிப்படையில் தான் அவர்கள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
அப்படி பார்க்கும் போது பிளேஆப் சுற்றுக்கு இன்னும் 3 காலியிடம் உள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு பிளேஆப் சுற்றில் வாய்ப்பு கடினம். அதே சமயம் பெங்களூர் அணி இன்னும் ஒரு போட்டியில் விளையாட வேண்டியது இருப்பதால் அந்த அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது பிளேஆப் சுற்றில் 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
The post பிளேஆப் சுற்றுக்கு 3 காலியிடம்: சுனில் கவாஸ்கர் appeared first on Dinakaran.