×

கோவையில் இன்று தமிழக பாஜ செயற்குழு கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: தமிழக பாஜ செயற்குழு கூட்டம் கோவையில் இன்று நடக்கிறது. இதில் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜ மாநில செயற்குழு கூட்டம் கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை)நடக்கிறது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர்கள் வினோத் தவுடு, சி.டி.ரவி, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்சியின் வளர்ச்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான், பாஜ தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார். இதனால் பாஜ-அதிமுக கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டது.

இதற்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். அதாவது பாஜவை அதிமுகவில் சேர்த்ததால் தான் அதிமுக தோல்வியை சந்தித்தது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் கூட்டணிக்கு பாஜ தான் தலைமை வகிக்கும் என்று அண்ணாமலை கூறி வந்தார். இதற்கும் அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும் அண்ணாமலை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து வெளியிடுவேன் என்றும் மறைமுகமாக எச்சரித்தார். இதனால் அதிமுக, பாஜ இடையே மோதல் உருவானது. இதை தொடர்ந்து இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேச தொடங்கினர். இதனால், இந்த 2 கட்சிகளின் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை அழைத்து அமித்ஷா சமாதானப்படுத்தினார். அதே நேரத்தில் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்றும் அண்ணாமலை கூறி வருகிறார். அதே நேரத்தில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று அதிமுகவின் தலைவர்கள் கூற தொடங்கியுள்ளனர். கூட்டணி அமைத்தால் தோல்வியை தான் சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தான் இன்று பாஜ செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதனால் இன்று நடக்கும் கூட்டத்தில் கூட்டணி உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று அதிமுகவின் தலைவர்கள் கூற தொடங்கியுள்ளனர்.

The post கோவையில் இன்று தமிழக பாஜ செயற்குழு கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Baja Executive Meeting ,Goa ,Chennai ,Tamil Nadu Baja Executive Executive Meeting ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...