×

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். பிளே ஆஃப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன..!!

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். பிளே ஆஃப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கி அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. ஸ்பான்ஷர் டிக்கெட் நீங்கலாக ஒரு போட்டிக்கு குறைந்தது 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 7 லீக் போட்டிகளுக்கும் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்சேப்பாக்கம் மைதானத்தில் 23ம் தேதி முதலாவது பிளே ஆஃப் போட்டியும், 24ம் தேதி எலிமினேட்டரும் நடைபெறுகிறது.

2 ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணி முதல் பேடிஎம் தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கி அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. ரூ.2000, ரூ.2500, ரூ.3000, ரூ.5000 என நான்கு பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்னர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை முதல் நாள் இரவில் இருந்து காத்திருந்து ரசிகர்கள் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். பிளே ஆஃப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன..!! appeared first on Dinakaran.

Tags : Chennai GP ,Play of Tourch ,Chennai ,Play of Match ,Chennai. ,GP ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...