×

கானாவில் சோகம்: தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி

சின்குவா: கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் சிலர், சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நடப்பது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது.

அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். தகவலறிந்து மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கானாவில் சோகம்: தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Xinhua ,Ghana ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...