×

மின் கம்பத்தில் டூவீலர் மோதி வியாபாரி பலி

 

சிவகாசி, மே 18: மின்கம்பத்தில் டூவீலர் மோதி வியாபாரி உயிரிழந்தார். சிவகாசி அருகே விளாம்பட்டி அருகே பூலாவூரணி தெற்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(35). இவர் சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் தனது டூவீலரில் விளாம்பட்டியில் இருந்து சென்ற போது தேன் காலனி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மின் கம்பத்தில் டூவீலர் மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Trader ,Sivakasi ,Phulavurani South ,Vlampatti ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை