வடமதுரை, மே 18: வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே தென்னம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. இதில் கோவிலில் அமைந்துள்ள நந்தி தேவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . பின் நந்தி தேவருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பிரதோஷ நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் வடமதுரை மற்றும் அருகிலுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரதோஷ வழிபாடு முடிந்தபின் பக்தர்களுக்கு புளியோதரை இனிப்பு பொங்கல் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.
The post வடமதுரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.
