×

நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை

நாட்றம்பள்ளி: நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன்(17). இவர் நாட்றம்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்தாண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அவர் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுதியிருந்தார். பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறுவேன் என்று வேதனையுடன் கூறி வந்துள்ளார். அவரை பெற்றோர் மற்றும் நண்பர்கள் சமாதானம் செய்துள்ளனர்.எனினும் மன வேதனையுடன் காணப்பட்ட பரமேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கீழே இறங்கி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்குள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு பரமேஸ்வரன் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nedramballi ,Tirupathur ,Nadrampalli Union Aathur ,Kubbam Puradakshi ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...