×

கேரளாவில் தகாத உறவால் பயங்கரம்; விடுதிக்கு வரவழைத்து இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை: காவல்நிலையத்தில் வாலிபர் சரண்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே போவிக்கானம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36). இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளது. இங்குள்ள உதுமா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா (34). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த பல வருடங்களாக தகாத உறவு இருந்துள்ளது. இதையடுத்து 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்துள்ளனர். இந்த விவரம் சதீஷின் மனைவிக்கு தெரியவந்துள்ளதால் அவர்களது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சதீஷை, தேவிகா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மேலும் பிரச்னை ஏற்படும் என்று கருதினார் சதீஷ். ஆகவே தேவிகாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று காஞ்சங்காட்டில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வருமாறு தேவிகாவை சதீஷ் அழைத்துள்ளார். பின்னர் அங்கு வைத்து திடீரென 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ், தேவிகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதன்பிறகு அருகில் உள்ள காஞ்சங்காடு போலீஸ் நிலையத்திற்கு சென்றார் சதீஷ், ‘’தேவிகாவை கொலை செய்த விவரத்தை கூறி சரணடைந்தார். அப்போது, தன்னுடைய குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் வேறு வழி இல்லாமல் தேவிகாவை கொலை செய்ததாக போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து சதீஷை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் லாட்ஜுக்கு விரைந்து சென்று தேவிகாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கேரளாவில் தகாத உறவால் பயங்கரம்; விடுதிக்கு வரவழைத்து இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை: காவல்நிலையத்தில் வாலிபர் சரண் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Walibar Charan ,Thiruvananthapuram ,Satish ,Povikanam ,Kasaragod ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...